கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மாநிலங்களவை மார்ச் 13 வரை ஒத்திவைப்பு: பட்ஜெட் தொடரின் முதல் பாதி நிறைவு!

மாநிலங்களவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பாதி நிறைவடைந்த நிலையில் மார்ச் 13ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

News image
Updated On :13 பிப்ரவரி 2023, 7:13 am

DIN

மாநிலங்களவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பாதி நிறைவடைந்த நிலையில் மார்ச் 13ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் ஜனவரி 31ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து பிப்ரவரி 1ஆம் தேதி 2023-24-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

இதனைத் தொடர்ந்து கடந்த 10 நாள்களாக இரு அவைகளிலும் அதானி குழும முறைகேடு புகார் குறித்து விவாதிக்க வேண்டும் என்றும், நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், பட்ஜெட் தொடரின் முதல் பாதியின் கடைசி நாளான இன்று காலை முதல் மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டதால் அவை நடவடிக்கைகள் முடங்கியது.

தொடர்ந்து, முதல் பாதி நிறைவு பெறுவதாக அறிவித்து மார்ச் 31ஆம் தேதி வரை மாநிலங்களவை ஒத்திவைப்பதாக அவைத் தலைவர் ஜகதீப் தன்கர் அறிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.