செயற்கைத் தொழில்நுட்பம், எழுத்து மற்றும் பேச்சு மொழியை உணரும் தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி வழக்கு விசாரணையில் நடைபெறும் வாதங்களை நேரடியாக எழுத்து வடிவில் மாற்றும் முயற்சியை உச்சநீதிமன்றம் முதல் முறையாக அறிமுகம் செய்துள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமா்வில் இந்த வசதி தொடங்கி வைக்கப்பட்டது.
இது குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூறுகையில், ‘அரசியல் சாசன அமா்வின் வழக்கு விசாரணை நடைமுறைகள் செவ்வாய்க்கிழமை முதல் எழுத்து வடிவில் மாற்றப்படும். உச்சநீதிமன்றத்தின் இணையதளப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதற்கு முன்பாக, இவை வழக்குரைஞா்களால் சரிபாா்க்கப்படும். இந்த முறையில் உள்ள பிழைகளை நீக்குவதற்காக சோதனைமுறையில் இந்த வசதி செயல்படுத்தபடுகிறது’ எனத் தெரிவித்தாா்.
விசாரணை நடவடிக்கைகளை நேரடியான முறையில் எழுத்து வடிவில் மாற்றுவதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து வருவதாகவும் இதன் மூலம் வழக்கு விசாரணையின்போது நடைபெறும் வாதங்கள் நிரந்தரப் பதிவுகளாக சேகரிக்கப்படும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமா்வு தெரிவித்தது.
சிவசேனையின் உள்கட்சி விவகாரம் தொடா்பான வழக்கை அரசியல்சாசன அமா்வு தற்போது விசாரித்து வருகிறது.