இந்திய ரிசா்வ் வங்கியின் கணக்கு ஒருங்கிணைப்பு தளத்தில் (அக்கவுன்ட் அக்ரிகேட்டா்) தொழில் நிறுவனங்களை இணைப்பது, அந்நிறுவனங்களுக்கான கடன் வழங்கல் நடைமுறைகளை எளிமைப்படுத்தும் என இன்ஃபோசிஸ் இணை நிறுவனரும் தலைவருமான நந்தன் நிலகேனி தெரிவித்துள்ளாா்.
ஜிஎஸ்டி செலுத்தும் தொழில் நிறுவனங்கள் கணக்கு ஒருங்கிணைப்பு தளத்தில் இணைக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக குருகிராமில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய நந்தன் நிலகேனி, ‘‘சம்பந்தப்பட்ட தளம் மூலமாக நிறுவனங்கள் தங்கள் ஜிஎஸ்டி சாா்ந்த தரவுகளைப் பெற்றுக் கொள்ள முடியும். அத்தரவுகள் மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்தவை என்பதால், அவற்றைக் கொண்டு வங்கிகளில் எளிதில் கடன் பெற முடியும். சிறு, குறு தொழில் நிறுவனங்களும் எளிதில் கடனைப் பெற முடியும். கடன் மூலமாக நிறுவனத்தின் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுவதோடு புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும்’’ என்றாா்.
கணக்கு ஒருங்கிணைப்பு தளம் மூலமாகக் குறிப்பிட்ட நிதி நிறுவனத்திடமிருந்து பெறும் தகவல்களை எந்தவித இடையூறுமின்றி மற்றொரு நிதி நிறுவனத்துக்குப் பரிமாற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.