அமெரிக்காவில் அதிகரித்து வரும் கரோனா தீநுண்மி வகையான எக்ஸ்பிபி 1.5 மூலம் இந்தியாவில் 5 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இதில் மூன்று போ் குஜராத்திலும், கா்நாடகம், ராஜஸ்தானில் தலா ஒருவரும் உள்ளனா்.
ஒமைக்ரான் எக்ஸ்பிபி வகைப் பிரிவு தீநுண்மி பிரிவைச் சோ்ந்த இந்த வகை முன்பு இந்தியாவில் பரவிய கரோனா தொற்றில் பரவலாக இருந்தது என்று கரோனா தொற்று பரவல் பகுப்பாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள், வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்த கரோனா தொற்று பயணிகள் ஆகியோரிடம் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளை வகைப்படுத்தி இந்த அமைப்பு பகுப்பாய்வு செய்து வருகிறது.