உத்தரப் பிரதேசத்தின் ஆக்ரா-லக்னௌ விரைவுச் சாலையில் உன்னாவ் என்ற இடத்தில் அடர்ந்த பனிமூட்டம் காரணமாக லாரி மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இருந்து நேபாளம் நோக்கி பேருந்து சென்றுகொண்டிருந்ததாக காவல்துறை கண்காணிப்பாளர் ஷஷி சேகர் சிங் தெரிவித்தார்.
உன்னாவ் என்று இடத்தில் அவுராஸ் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. மாநிலத்தின் பெரும்பாலான பகுதியில் இன்று காலை அடர்த்தியான பனிமூட்டம் நிலவியது.
மூடுபனி காரணமாக காட்டுத்திறன் குறைந்ததால் காலை 5.30 மணியளவில் ஆக்ரா-லக்னௌ விரைவுச் சாலையில் பேருந்து பின்னால் இருந்து லாரி மோதியது.
பேருந்தில் பயணம் செய்த மூன்று பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒரு பெண் மருத்துவனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
விபத்தில் உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகின்றது. பேருந்தில் 60 பயணிகள் இருந்த நிலையில், 6 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக போலிஸார் தெரிவித்தனர்.