ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வாகனம் கவிழ்ந்ததில் அதிகாரி உள்பட 3 பேர் பலி

ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ராணுவ அதிகாரி உள்பட 3 பேர் பலியாகினர். 
ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வாகனம் கவிழ்ந்ததில் அதிகாரி உள்பட 3 பேர் பலி

ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ராணுவ அதிகாரி உள்பட 3 பேர் பலியாகினர். 

ஜம்மு-காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தில் மாச்சல் என்ற பகுதியில் ராணுவ வாகனத்தில் இளநிலை அதிகாரி உள்பட 3 ராணுவ வீரர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். 

இந்நிலையில் வாகனம் பனி மூடிய பாதையில் சறுக்கி ஆழமான பள்ளத்தில் வீழ்ந்தது. இதில் நைப் சுபேதார் பர்ஷோதம் குமார், ஹவில்தார் அம்ரிக் சிங் மற்றும் சிப்பாய் அமித் சர்மா ஆகிய 3 பேரும் இறந்ததாகவும் அவரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

கடந்த சில நாள்களாக மாச்சல் பகுதியில் கடும் பனி நிலவி வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com