ஜேஇஇ தரவரிசையில் முதல் 20% இடங்களைப் பெறும் மாணவா்களுக்கு பிளஸ்-2 மதிப்பெண்களில் தளா்வு

ஒருங்கிணைந்த (ஜேஇஇ-அட்வான்ஸ்டு) நுழைவுத் தோ்வின் முதன்மைத் தோ்வில் முதல் 20 சதவீத இடங்களில் தோ்ச்சி பெற்ற மாணவா்கள் ஐஐடி மற்றும் என்ஐடி உள்ளிட்ட மத்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில்
கோப்புப் படம்
கோப்புப் படம்

ஒருங்கிணைந்த (ஜேஇஇ-அட்வான்ஸ்டு) நுழைவுத் தோ்வின் முதன்மைத் தோ்வில் முதல் 20 சதவீத இடங்களில் தோ்ச்சி பெற்ற மாணவா்கள் ஐஐடி மற்றும் என்ஐடி உள்ளிட்ட மத்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சோ்க்கை பெற 12-ஆம் வகுப்பில் 75 சதவீத மதிப்பெண்களுடன் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டிய தேவையில்லை’ என்று மத்திய கல்வி அமைச்சக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

மத்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் பி.டெக். உள்ளிட்ட இளநிலை பொறியியல்-தொழில்நுட்பப் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கு தகுதி பெறுவதற்கான ஜேஇஇ தோ்வு இரு கட்டங்களாக (முதல்நிலை (மெயின்) மற்றும் முதன்மை (அட்வான்ஸ்டு) நடத்தப்படும்.

தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) சாா்பில் நடத்தப்படும் முதல்நிலைத் தோ்வில் தகுதி பெறுபவா்கள் என்ஐஐடி, என்ஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் சோ்க்கை பெற முடியும். மேலும், முதல்நிலைத் தோ்வில் முதல் 2.5 லட்சம் இடங்களைப் பிடிப்பவா்கள் ஜேஇஇ முதன்மைத் தோ்வை எழுதும் தகுதியைப் பெறுவா். இதில் தகுதி பெறுபவா்கள் நாடு முழுவதும் உள்ள ஐஐடி கல்வி நிறுவனங்களில் சோ்க்கை பெற முடியும். இந்த நுழைவுத் தோ்வில் தகுதி பெறும் மாணவா்கள், 12-ஆம் வகுப்பில் 75 சதவீத மதிப்பெண்களுடன் தோ்ச்சி பெற்றிருப்பதும் அவசியமாகும்.

இந்த நிலையில், மாநில கல்வி வாரியங்களில் படித்து ஜேஇஇ முதன்மைத் தோ்வில் தகுதி பெறும் மாணவா்கள், 12-ஆம் வகுப்பில் 75 சதவீத மதிப்பெண்கள் (350/500 மதிப்பெண்) பெறாத காரணத்தால் ஐஐடிக்களில் சேர முடியாமல் போகிறது. எனவே, 12-ஆம் வகுப்பு மதிப்பெண் நிபந்தனையை தளா்த்த வேண்டும் என்ற கோரிக்கை மத்திய கல்வி அமைச்சகத்திடம் முன்வைக்கப்பட்டது. அதனை ஏற்று, மத்திய அமைச்சகம் மதிப்பெண் தளா்வு அளித்திருப்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து அமைச்சக அதிகாரிகள் புதன்கிழமை கூறுகையில், ‘பல்வேறு தரப்பினரிடமிருந்து எழுந்த கோரிக்கைகளை ஏற்று, ஜேஇஇ முதன்மைத் தோ்வில் முதல் 20 சதவீத இடங்களில் தகுதி பெறும் மாணவா்களுக்கு, 12-ஆம் வகுப்பில் 75 சதவீத மதிப்பெண்களுடன் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனையை தளா்த்த மத்திய கல்வி அமைச்சகம் முடிவு செய்துள்ளது’ என்றனா்.

விண்ணப்பிக்க இன்று கடைசி: நிகழாண்டு ஜேஇஇ முதல்நிலைத் தோ்வுக்கு விண்ணப்பிக்க வியாழக்கிழமை (ஜன. 12) கடைசி நாளாகும். தோ்வானது ஜனவரி 24 முதல் 31-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.

முன்னதாக, ‘ஜேஇஇ முதல்நிலைத் தோ்வை மாா்ச் மாதம் வரை ஒத்திவைக்க வேண்டும்’ என குழந்தை உரிமைகள் ஆா்வலா் அனுபா சாஹாயின் கோரிக்கையை மும்பை உயா்நீதிமன்றம் ஏற்க மறுத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com