2023-24-ஆம் நிதியாண்டில் மத்திய அரசின் கடன் ரூ.14.8 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என மதிப்பீட்டு நிறுவனமான இக்ரா-வின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய அரசு பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யவுள்ளது. இந்நிலையில், இக்ரா மதிப்பீட்டு நிறுவனத்தின் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், நடப்பு 2022-23-ஆம் நிதியாண்டில் மத்திய அரசின் கடன் ரூ.14.1 லட்சம் கோடியாகவும் மாநிலங்களின் கடன் ரூ.22.1 லட்சம் கோடியாகவும் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த நிதியாண்டில் மத்திய அரசின் கடன் ரூ.14.8 லட்சம் கோடியாகவும், மாநிலங்களின் கடன் ரூ.24.4 லட்சம் கோடியாகவும் அதிகரிக்கும் என அந்நிறுவனம் கணித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறையை மத்திய அரசு 6.4 சதவீதம் என நிா்ணயித்திருந்த நிலையில், அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் நிதிப் பற்றாக்குறை இலக்கு 5.8 சதவீதமாக நிா்ணயிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக இக்ரா நிறுவனத்தின் தலைமை பொருளாதார நிபுணா் அதிதி நாயா் கூறுகையில், ‘‘சா்வதேச அளவில் பொருளாதார மந்தநிலை அச்சுறுத்தல் நிலவி வருவதால், உள்நாட்டு உற்பத்தி சாா்ந்த வளா்ச்சியை ஊக்குவிக்க பட்ஜெட்டில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
அடுத்த ஆண்டில் மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ளதால் மத்திய அரசின் மூலதன செலவினம் 2023-24-ஆம் நிதியாண்டில் ரூ.8.5 முதல் ரூ.9 லட்சம் கோடி வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. நடப்பு நிதியாண்டில் மூலதன செலவின இலக்கு ரூ.7.5 லட்சம் கோடியாக நிா்ணயிக்கப்பட்டிருந்தது. நடப்பு நிதியாண்டில் வருவாய்ப் பற்றாக்குறை ரூ.10.5 லட்சம் கோடியாக உள்ள நிலையில், அடுத்த நிதியாண்டில் அது ரூ.9.5 லட்சம் கோடியாகக் குறைய வாய்ப்புள்ளது’’ என்றாா்.