கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் தில்லி-பாரீஸ் விமானத்தில் அத்துமீறி நடந்து கொண்ட பயணிகளின் செயல்கள் குறித்து விமானப் போக்குவரத்து ஒழுங்காற்று இயக்குநரகத்துக்கு (டிஜிசிஏ) முறைப்படியாக தகவல்களை ஏர்-இந்தியா அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டில் அந்நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஒரே வாரத்தில், டிஜிசிஏ தரப்பில் எடுக்கப்பட்டுள்ள 2-ஆவது ஒழுங்கு நடவடிக்கையாகும் இது.