பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

குஜராத்தில் பைக்கில் சென்றவர் மீது கார் மோதி 12 கிலோ மீட்டர் இழுத்துச் சென்றவர் பலி: கார் உரிமையாளர் கைது

சூரத்தில் இருச்சக்கர வாகனம் மீது கார் மோதி, காரின் அடியில் சிக்கி 12 கிலோமீட்டர் இழுத்துச் சென்றவர் இறந்த நிலையில், காரின் உரிமையாளரை குஜராத் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்துள்ளனர்.

News image
Updated On :28 ஜனவரி 2023, 11:32 am IST

குஜராத்: சூரத்தில் இருச்சக்கர வாகனம் மீது கார் மோதி, காரின் அடியில் சிக்கி 12 கிலோமீட்டர் இழுத்துச் சென்றவர் இறந்த நிலையில், காரின் உரிமையாளரை குஜராத் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்துள்ளனர்.

கடந்த டிசம்பம் மாதம் 18 ஆம் தேதி குஜராத் மாநிலம் சூரத் நகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள பல்சானா நெடுஞ்சாலையில் இருச்சக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது கார் மோதிவிட்டு கார் நிற்காமல் சென்றது. இருச்சக்கர வாகனத்தில் சென்றவர் அந்த காரின் அடியில் சிக்கிக்கொண்டு தொடர்ந்து 12 கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் சென்றதில் அவர் உயிரிழந்தார். 

இதுகுறித்து சூரத் கிராமப்புற துணைக் காவல் கண்காணிப்பாளர் இலேஷ் படேல் கூறுகையில், இருச்சக்கர வாகனத்தில் சென்றவர் மீது கார் மோதிய வேகத்தில் இருச்சக்கர வாகனத்தில் சென்றவர் கீழே விழுந்து காருக்குள் சிக்கிக் கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து கார் வேகமாக சென்றுள்ளது. இதனை பார்த்தோர் செல்போனில் விடியோ எடுத்துக்கொண்டே காரை விரட்டிச் சென்றுள்ளனர். அதனை பார்த்தவர் காரை நிறுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார். முதலில் மும்பை, பின்னர் ராஜஸ்தான் என தலைமறைவாக இருந்துள்ளார். கடைசியாக அவரது செல்போன் மூலம் அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்த போலீசார் வியாழக்கிழமை காம்ரேஜ் சுங்கச்சாவடியில் நுழையும் போது அவரை கைது செய்தனர்.

விபத்து நடந்த இடத்தில் இருந்து 12. கிமீ தொலைவில் காருக்கு அடியில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. உயிரிழந்தவர் சாகர் பாட்டீல் என்றும், அவரது கணவர் பிலியன் என்றும், காரை ஓட்டிச் சென்ற பிரேன் லடுமோர் அஹிர் கட்டுமானத் தொழிலதிபர் என்பது தெரியவந்துள்ளதாக படேல் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.