மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஜிஎஸ்டியுடன் அமலாக்கத்துறை சேர்வதால் வணிகர்களும் கைதாகலாம்: கேஜரிவால்

ஜிஎஸ்டியை அமலாக்கத் துறையுடன் சேர்ந்திருப்பதால் வரி செலுத்தும் வணிகர்களும் கைது செய்யப்படலாம் என்று தில்லி முதல்வர் கேஜரிவால் தெரிவித்துள்ளார். 

News image
கோப்புப்படம்
Updated On :11 ஜூலை 2023, 10:15 am

DIN

ஜிஎஸ்டியை அமலாக்கத் துறையுடன் சேர்ந்திருப்பதால் வரி செலுத்தும் வணிகர்களும் கைது செய்யப்படலாம் என்று தில்லி முதல்வர் கேஜரிவால் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக கேஜரிவாலின் சுட்டுரை பதிவில், 

ஜிஎஸ்டி நெட்வொர்க்குடன் தகவல்களைப் பகிர்ந்துகொள்ள அமலாக்கத்துறை அனுமதித்த நிலையில், பணமோசடி சட்டத்தின் விதிகளை அரசு திருத்தியுள்ளது. பணமோசடி மூலம் தவிர்க்கப்பட்ட ஜிஎஸ்டியை மீட்டெடுக்க இந்த நடவடிக்கை மேற்கொண்டது. 

வணிகர்களின் பெரும் பகுதியினர் ஜிஎஸ்டியை செலுத்துவதில்லை. சிலர் கட்டாயத்தின் பேரில் செலுத்தி வருகின்றனர். மத்திய அரசின் இந்த நடவடிக்கையால், ஒரு தொழிலதிபர் ஜிஎஸ்டியை சரியாக செலுத்தவில்லை என்றால், அவர் அமலாக்கத்துறையால் நேரடியாக கைது செய்யப்படுவர். அவருக்கு ஜாமீன் வழங்கப்படாது. 

ஜிஎஸ்டிஎன் மறைமுக வரி ஆட்சியின் தொழில்நுட்ப முதுகெலும்பைக் கையாளுகிறது. வருமானம், வரி தாக்கல் மற்றும் பிற இணக்கங்கள் உள்பட அனைத்து ஜிஎஸ்டி தொடர்பான தகவல்களுக்கும் களஞ்சியமாக உள்ளது. 

பணமோசடி தடுப்பு சட்டம்(பி.எம்.எல்.ஏ), 2002-இன் விதிமுறைகளின் திருத்தத்தின்படி, அமலாக்கத்துறை தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும் நிறுவனங்களின் பட்டியலில் ஜி.எஸ்.டி.என் சேர்க்கப்பட்டுள்ளது.

இது மிகவும் சிக்கலானது. ஜிஎஸ்டியுடன் அமலாக்கத்துறை சேர்த்திருப்பதால் சரியாக வரி செலுத்துபவர்களும்கூட கைது செய்யப்படலாம். மத்திய அரசு விரும்பும் போதெல்லாம் எந்ததொரு தொழிலதிபரையும் சிறைக்கு அனுப்பலாம். இது மிகவும் ஆபத்தானது என குற்றம் சாட்டியுள்ளார். 

ஜிஎஸ்டி கவுன்சிலின் 50-ஆவது கூட்டம் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் தில்லியில் இன்று(செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ள நிலையில் கேஜரிவால் இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.