மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஒடிசா ரயில் விபத்து: பிகார் மாநிலத்தில் பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு!

ஒடிசாவின் பாலாசோரில் ஏற்பட்ட கோர ரயில் விபத்தில் பிகார் மாநிலத்தில் பலி எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளதாக மாநில பேரழிவு மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது. 

News image
Updated On :8 ஜூன் 2023, 7:46 am

ஒடிசாவின் பாலாசோரில் ஏற்பட்ட கோர ரயில் விபத்தில் பிகார் மாநிலத்தில் பலி எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளதாக மாநில பேரழிவு மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது. 

பிகார் பேரழிவு மேலாண்மைத் துறையின் தகவலின்படி, 

ஒடிசாவில் கடந்த ஜூன் 2-ம் தேதி ஏற்பட்ட ரயில் விபத்தில் பிகாரைச் சேர்ந்தவர்கள் 50 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நேற்றுவரை 40 பேர் பலி என்று கூறப்பட்ட நிலையில், இன்று மேலும் அதிகரித்துள்ளது. 

ரயில் விபத்தில் சிக்சிய 19 பேர் காணமால் போயுள்ளனர். 43 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

பிகாரைச் சேர்ந்த 50 பேரில், முசாபர்பூர்(9), மாதுபானி(6), பகல்பூர்(7), கிழக்கு சம்பரன்(5), பூர்னியா (2), மேற்கு சம்பரன்(3), நவாடா(2), தார்பாங்கா(2), ஜமுய்(2) சமஸ்திபூர்(3), பாங்கா(1)பீப்குசாரை(1), கயா(1), காகாரியா(3), சார்ஷா(1), சிதாமரிஹி(1), முங்கர்(1) ஆகிய மாவட்டங்களில் பலி எண்ணிக்கை பதிவாகியுள்ளது. 

பிகார் அரசு நான்கு அதிகாரிகளைக் கொண்ட குழுவை பாலாசோருக்குக்கு அனுப்பியுள்ள நிலையில், இறந்த உடல்களை அடையாளம் காணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.