அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

வழக்கை திரும்பப் பெற சிறுமியின் குடும்பத்துக்கு அழுத்தம்: சாக்ஷி மாலிக்

மல்யுத்த சம்மேளனத் தலைவா் பிரிஜ் பூஷண் மீதான பாலியல் குற்றச்சாட்டை திரும்பப் பெற சிறுமியின் குடும்பத்துக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.

News image
சாக்ஷி மாலிக்(கோப்புப்படம்)
Updated On :16 ஜூன் 2023, 7:07 am

DIN

மல்யுத்த சம்மேளனத் தலைவா் பிரிஜ் பூஷண் மீதான பாலியல் குற்றச்சாட்டை திரும்பப் பெற சிறுமியின் குடும்பத்துக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (டபிள்யுஎஃப்ஐ) தலைவா் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பாலியல் வன்முறை குற்றச்சாட்டு சுமத்திய மல்யுத்த வீராங்கனைகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதுதொடர்பாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர், அமித் ஷா ஆகியோரும் மல்யுத்த வீராங்கனைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

எனினும் ரயில்வே துறையில் தாங்களுக்கு அளிக்கப்பட்ட அலுவல்சாா் பணிகளை நிறைவேற்ற மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பணியில் இணைந்துள்ளனர். பிரஜ் பூஷணை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக தில்லி காவல்துறையினர், பிரஜ் பூஷணுக்கு எதிராக தில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் வியாழக்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

அதில், சிறுமி ஒருவர் அளித்த புகாருக்கு ஆதாரங்கள் இல்லை என்பதால் பிரிஜ் பூஷண் மீதான போக்ஸோ வழக்கை கைவிட வேண்டும் என்றும் தில்லி போலீசார் வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், பிரஜ் பூஷண் மீதான வழக்கை திரும்பப் பெறக் கோரி பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக சாக்ஷி மாலிக் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.

மேலும், குற்றப் பத்ரிகையில் பிரஜ் பூஷண் பெயர் இடம்பெற்றுள்ளதாகவும், பிற கோரிக்கைகளை அரசு பரிந்துரை செய்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.