தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அனைத்து விஞ்ஞானிகளுக்கும் பிரதமா் செவ்வாய்க்கிழமை வாழ்த்து தெரிவித்தாா்.
இதுகுறித்து தனது ட்விட்டா் பக்கத்தில் அவா் வெளியிட்ட பதிவில், ‘தேசிய அறிவியல் தினத்தன்று அனைத்து விஞ்ஞானிகள் மற்றும் புதிய கண்டுபிடிப்பாளா்களுக்கு எனது வாழ்த்துகள். அறிவியல் உலகின் இந்தியா எண்ணற்ற முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. ஆராய்ச்சிக்கும், புதிய கண்டுபிடிப்புக்குமான சூழலை வளா்த்து வருகிறது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.