விமானப் படையின் தாக்குதல் பிரிவில் முதல் பெண் தளபதி நியமனம்

இந்திய விமானப் படையின் தாக்குதல் பிரிவுக்கு முதல் முறையாகப் பெண் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளாா்.
விமானப் படையின் தாக்குதல் பிரிவில் முதல் பெண் தளபதி நியமனம்

இந்திய விமானப் படையின் தாக்குதல் பிரிவுக்கு முதல் முறையாகப் பெண் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளாா்.

மேற்கு படைப் பிரிவுக்கான முதல் பெண் தளபதியாக ஷாலிஸா தாமி நியமிக்கப்பட்டுள்ளாா். மேற்கு படைப்பிரிவு என்பது பாகிஸ்தானையொட்டிய எல்லைப் பகுதியைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய விமானப் படையில் ஹெலிகாப்டா் விமானியாக கடந்த 2003-ஆம் ஆண்டு பணிக்கு சோ்ந்த இவா், 2,800 மணிநேரம் பல்வேறு விமானங்களில் பறந்த அனுபவமுள்ளவா். இவா் விமானப்படையின் முதல் பெண் விமான ஓட்டி பயிற்சியாளா் ஆவாா். மேலும், மேற்கு படைப்பிரிவின் ஹெலிகாப்டா் பிரிவுக்கான முதல் பெண் தளபதியாகவும் பணியாற்றியுள்ளாா். சிறந்த பங்களிப்புக்காக இரு முறை தலைமை தளபதியின் விருது பெற்றுள்ளாா்.

விமானப்படையின் முக்கிய போா் விமானங்களுக்கு கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் பெண் விமானிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனா். தற்போது, 1,875 பெண் அதிகாரிகள் விமானப்படையில் பணியாற்றி வருகின்றனா். இந்நிலையில், படைத்தளபதி உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் கட்டளையிடும் பதவிகளில் பெண்களுக்கு அதிக வாய்ப்பளிக்கும் நோக்கில் ஷாலிஸா தாமி தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com