பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

லோக் ஆயுக்தா அமைப்பு வலுவிழந்து வருவது நிறுத்தப்பட வேண்டும்: உச்சநீதிமன்ற நீதிபதி

புதிதாகக் கொண்டுவரப்படும் கட்டுப்பாடுகளால் லோக் ஆயுக்தா அமைப்பு வலுவிழந்து வருகிறது என்று உச்ச நீதிமன்ற நீதிபதி வருத்தம் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :16 நவம்பர் 2023, 12:28 pm IST

லோக் ஆயுக்தா அமைப்பு வலுவிழந்து ‘பல் இல்லாத புலி’யாக மாறிவருவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா தெரிவித்துள்ளார். 

லோக் ஆயுக்தா நாளை முன்னிட்டு புதன்கிழமை கேரளாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பேசியபோது இவ்வாறு கூறினார். 

உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா பேசியதாவது: “அனைத்து மாநிலங்களிலும் லோக் ஆயுக்தா அமைப்பு அவர்களின் பணிகளை சுதந்திரமாக செய்வதற்கு தேவையான ஆதரவை வழங்குவது அவசியம். புதிதாகக் கொண்டுவரப்படும் கட்டுப்பாடுகள் அல்லது சட்டத்திருத்தங்களின் மூலம் இந்த மகத்தான நிறுவனங்களை வலுவிழக்கச் செய்து ‘பல் இல்லாத புலி’யாக மாற்றுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

மேலும் இந்த நிறுவனங்களை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்துவதும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இவை போதிய பலத்துடன் சுதந்திரமாக செயல்படுவதை உறுதிசெய்யவேண்டும்.” என்று தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து லோக் ஆயுக்தா சட்டத்தின் 14-வது பிரிவு மிகவும் சிறந்தது என்று கூறிய அவர், “ஒரு புகார் மீதான விசாரணைக்குப் பிறகு குற்றம்சாட்டப்பட்டவர் குற்றத்தில் ஈடுபட்டிருப்பதாக லோக் ஆயுக்தா கருதினால், சம்பந்தப்பட்ட அரசு ஊழியர் அவர் வகித்த பதவியில் தொடரக்கூடாது என அறிவிக்க அதிகாரம் படைத்தது.” என்று பேசினார். 

கேரள லோக் ஆயுக்தா சட்டத்தில் திருத்தம் செய்வதாக அறிவித்த கேரள அரசின் முடிவு பல்வேறு விவாதங்களுக்கு வழிவகுத்தது. மேலும் கேரள மாநில சட்டப்பேரவையால் திருத்தப்பட்ட அம்சங்களில் பிரிவு 14 உள்ளது. இந்த மசோதா தற்போது ஆளுநரிடம் நிலுவையில் உள்ளது.

இருப்பினும், இந்த குறிப்பிட்ட திருத்தம் குறித்து நீதிபதி நாகரத்னா எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

லோக் ஆயுக்தா என்பது அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் தங்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தும்போதும், ஊழலில் ஈடுபடும்போதும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் விசாரணை மன்றம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.