ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

ஆந்திர உயர் நீதிமன்றத்தில் 4 கூடுதல் நீதிபதிகள் பதவியேற்பு!

ஆந்திரப் பிரதேச உயர்நீதிமன்றத்தில் நான்கு கூடுதல் நீதிபதிகள் சனிக்கிழமை பதவியேற்றுக்கொண்டனர். 

News image
Updated On :21 அக்டோபர் 2023, 8:08 am

DIN

ஆந்திரப் பிரதேச உயர்நீதிமன்றத்தில் நான்கு கூடுதல் நீதிபதிகள் சனிக்கிழமை பதவியேற்றுக்கொண்டனர். 

உயர் நீதிமன்றத்தின் நான்கு புதிய கூடுதல் நீதிபதிகளுக்கு விஜயவாடாவில் ஆளுநர் எஸ்.அப்துல் நசீர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். தும்மலப்பள்ளி கலேஷேத்திரம் அரங்கத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது. 

ஹரிநாத் நுனேபல்லி, கிரண்மாயி மாண்டவா, சுமதி ஜெகதம் மற்றும் நியாபதி விஜய் ஆகியோர் புதிதாகப் பதவியேற்றுக் கொண்ட கூடுதல் நீதிபதிகள் ஆவார். 

இந்த விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதிகள், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். 

முன்னதாக, பதவியேற்பு விழாவுக்கு முன்னதாக, ஆளுநர் மாளிகையில் ஆளுநரை முதல்வர் சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.