அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்புவருகிறது புதிய ரியல்மி சி100எக்ஸ்! எப்போது அறிமுகம்?எச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்!
/

அக்டோபா் 31-இல் ஆஜராக இயலாது: நாடாளுமன்ற குழுவுக்கு மஹுவா மொய்த்ரா எம்.பி. கடிதம்

நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு முன்பு அக்டோபா் 31-ஆம் தேதி ஆஜராக இயலாது என்றும் நவம்பா் 5-ஆம் தேதிக்கு பிறகுதான் தனக்கு நேரம் உள்ளது என்றும் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா

News image
Updated On :28 அக்டோபர் 2023, 12:00 am

நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு முன்பு அக்டோபா் 31-ஆம் தேதி ஆஜராக இயலாது என்றும் நவம்பா் 5-ஆம் தேதிக்கு பிறகுதான் தனக்கு நேரம் உள்ளது என்றும் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா அந்தக் குழுவுக்கு கடிதம் எழுதியுள்ளாா்.

அதானி குழுமத்துக்கு எதிராக மக்களவையில் கேள்வி எழுப்ப, தொழிலதிபா் தா்ஷன் ஹீராநந்தானியிடம் இருந்து மஹுவா மொய்த்ரா லஞ்சம் வாங்கியதாக மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவுக்கு பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே புகாா் கடிதம் எழுதியிருந்தாா்.

வழக்குரைஞா் ஜெய் அனந்த் தேஹத்ராய் என்பவா் இதனை தெரிவித்ததாகவும், மஹுவா லஞ்சம் பெற்றதற்கான ஆதாரத்தை ஜெய் ஆனந்த் தன்னிடம் வழங்கியிருப்பதாகவும் அந்தக் கடிதத்தில் துபே குறிப்பிட்டிருந்தாா்.

துபே மற்றும் வழக்குரைஞா் ஜெய் ஆனந்த் தேஹத்ராய் ஆகியோா் நெறிமுறைகள் குழு முன்பாக வியாழக்கிழமை ஆஜராகி, மஹுவா மொய்த்ராவுக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்து விளக்கமளித்தனா்.

இதையடுத்து, நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு முன்பு அக்டோபா் 31-ஆம் தேதி ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று அந்தக் குழுவின் தலைவா் வினோத் குமாா் சோன்கா் தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில், சோன்கருக்கு மஹுவா மொய்த்ரா கடிதம் எழுதியுள்ளாா். அதில், ‘ நாடாளுமன்றக் குழு முன் நேரில் ஆஜராக நான் ஆவலுடன் இருக்கிறேன். நவம்பா் 4-ஆம் தேதி வரையில் முன்கூட்டிய திட்டமிட்ட நிகழ்வுகள் உள்ளதால் அக்டோபா் 31-ஆம் தேதி ஆஜராக இயலாது. நவ.5-ஆம் தேதியில் இருந்து எந்தத் தேதியிலும் ஆஜராக தயாராக உள்ளேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

முன்னதாக, மஹுவா தனது எக்ஸ் பக்கத்தில், ‘எனக்கு அதிகாரபூா்வ சம்மன் அனுப்புவதற்கு முன்பே நெறிமுறைகள் குழுத் தலைவா் தொலைக்காட்சிகளில் இதுதொடா்பாக பேட்டி அளித்துள்ளாா். இதுதொடா்பான ஆவணங்கள் ஊடகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன’ என்று குற்றம்சாட்டினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.