எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய தருணம்: ஜி20 மாநாட்டில் மோடி பேச்சு

நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய தருணம் இது என்று ஜி20 உச்சி மாநாட்டில் துவக்க உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

News image
Updated On :9 செப்டம்பர் 2023, 6:52 am

DIN


புது தில்லி: நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய தருணம் இது என்று ஜி20 உச்சி மாநாட்டில் துவக்க உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

புது தில்லியில் அமைந்துள்ள பிரகதி அரங்கில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்த ஜி20 உச்சி மாநாடு சனிக்கிழமை காலை 10.30 மணிக்குத் தொடங்கியது.

உச்சி மாநாட்டின் தொடக்கத்தில், மொராக்கோவில் நேரிட்ட நிலநடுக்கத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பிறகு,  ஆப்ரிக்க யூனியனை நிரந்தர உறுப்பினராக சேர்க்கும் நடைமுறை நிறைவு பெற்று, ஜி20 அமைப்பில் 21வது நாடாக ஆப்ரிக்க யூனியன் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.

உச்சி மாநாட்டில் துவக்க உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, வளமான எதிர்காலத்திற்காக ஜி20 நாடுகள் இணைந்து செயல்படுவது அவசியம் என்று கூறினார்.

Story image

பயங்கரவாதம், இணையப் பாதுகாப்பு, சுகாதாரம், எரிசக்தி உள்ளிட்ட பிரச்னைகளுக்கு உறுதியான தீர்வைக் காண வேண்டும்.

போரினால் உலகளவில் இழந்த நம்பத்தன்மையை மீட்டெடுக்க வேண்டும்.  வளமான எதிர்காலத்துக்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய தருணம் இது. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதையே நாம் உலக அரங்கில் எடுத்துச் செல்ல வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இந்த இக்கட்டான நேரத்தில், மொராக்கோவுக்குத் தேவையான உதவிகளை செய்ய இந்தியா தயாராக உள்ளது என்றும் நரேந்திர மோடி கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடியின் துவக்க உரையைத் தொடர்ந்து, பல்வேறு நாட்டுத் தலைவர்களும் உரையாற்றி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.