பொங்கல் திருநாளுக்கு வழங்கப்படும் வேட்டியின் அளவு 4 முழமாகக் குறைப்பு: அமைச்சர்டாஸ்மாக் ஊழியர்களுக்கு நாளைமுதல் ஊதிய உயர்வு!தவெக அரசுடன் சென்னை மேயர் சேர்ந்து செயல்படுவதில்லை: ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டுகொலைக்களமாக மாறுகிறதா தமிழ்நாடு? டிடிவி தினகரன் கேள்வி! தேர்தல் வழக்குகள்: முதல்வர் விஜய் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை தள்ளிவைப்புகொளத்தூரில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு 2026 பிரதமர் வேட்பாளர் யார்? தமிழக அரசியலில் உருவான சூறாவளி!தமிழ்நாடு மின் தொடரமைப்பு கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்: முதல்வர் அறிவிப்புபால் கொள்முதல் விலை மேலும் ரூ.3 உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்புநேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 903ஆக உயர்வு! முதல்வர் விஜய்க்கு பிரதமராகும் எண்ணம் துளியும் கிடையாது: வைகோ சாலை விரிவாக்கம்! விரைவில் விரிவான திட்ட அறிக்கை வெளியிடப்படும் - ஆதவ் அர்ஜுனா தகவல் கொடியேற்றத்துடன் தொடங்கியது திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித் திருவிழா! ஹோர்முஸ் நீரிணையில் ஈரானிய ராக்கெட் ஏவுதளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்ஆன்லைன் செயலி மூலம் மோசடி: செப்டிக் டேங்கில் பதுக்கப்பட்ட பணம்? போலீஸார் உடைத்து சோதனை

ஒடிசாவின் முதல் பெண் பேரவைத் தலைவர் ஆவாரா பிரமிளா மல்லிக்?

ஒடிசாவின் பேரவைத் தலைவர் பதவிக்கு அமைச்சர் பிரமிளா மல்லிக் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Published On :2 பிப்ரவரி 2024, 8:29 am IST

ஒடிசாவின் பேரவைத் தலைவர் பதவிக்கு அமைச்சர் பிரமிளா மல்லிக் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதையடுத்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சராக இருந்த பிரமிளா மல்லிக் நவீன் பட்நாயக் அமைச்சரவையில் இருந்து ராஜிநாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆறு முறை எம்எல்ஏவாக இருந்த மல்லிக் தனது ராஜிநாமா கடிதத்தை முதல்வரிடம் கொடுத்துள்ளார். அதைத்தொடர்ந்து ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். மல்லிக் ராஜினாமாவை தொடர்ந்து நவீன் பட்நாயக் அமைச்சரவையில் முதல்வர் உள்பட 20 அமைச்சர்கள் உள்ளனர்.

ஒடிசா சட்டப் பேரவையின் தலைவர் பதவிக்கு மல்லிக் வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த அமைச்சரவை மாற்றத்தில் நிதியமைச்சராக விக்ரம் கேசரி அருகா நியமிக்கப்பட்டதையடுத்து, ஒடிசா சட்டப்பேரவைத் தலைவர் பதவி காலியானது. 147 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் ஆளும் பிஜேடிக்கு 113 எம்எல்ஏக்கள் இருப்பதால் ஓஎல்ஏவின் அடுத்த பேரவைத்தலைவர் பதவிக்கு மல்லிக் தயாராக உள்ளார் எனத் தெரிகிறது. எதிர்க்கட்சியான பாஜகவுக்கு 22 எம்எல்ஏக்கள் உள்ளனர். 9 எம்எல்ஏக்கள் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள்.

பேரவைத் தலைவருக்கான தேர்தல் செப்.22-ம் தேதி காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது. அதேநேரத்தில் சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் அன்றைய தினம் தொடங்கி அக்.4-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

முன்னதாக, சபாநாயகர் தேர்தல் செப்டம்பர் 21ஆம் தேதியும், வேட்புமனுத் தாக்கல் செப்டம்பர் 18ஆம் தேதியும் நடைபெற இருந்தது. மேற்கு ஒடிசாவின் விவசாயத் திருவிழா செப்.21-ம் நிகழ்வதால், தேர்தலைப் புறக்கணிப்பதாக எதிர்க்கட்சியான பாஜக மற்றும் காங்கிரஸ் அறிவித்ததையடுத்து, தேர்தல் செப்டம்பர் 22ஆம் தேதிக்கும், வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 21ஆம் தேதிக்கும் மாற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.