

புதுதில்லி: ஆகம விதிகளை பின்பற்றும் கோயில்களில் அர்ச்சகர்களை நியமிக்க இடைக்கால தடைவிதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆதி சவை சிவாச்சாரியார்கள் நலச்சங்கம் சார்பில் தொடர்ந்த வழக்கில், ஆகம விதிகளை பின்பற்றும் கோயில்களில் அர்ச்சகர்களை நியமிக்க இடைக்கால தடைவிதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், இது குறித்து 3 வாரங்களுக்குள் தமிழ்நாடு இந்து அறநிலைத் துறை, தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்.
அதில் தமிழ்நாட்டில் உள்ள ஆகம கோயில்களில் அர்ச்சகர்கள் நியமனம், பயிற்சி உள்ளிட்டவைக்கு சேஷம்மாள், ஆதி சைவ சிவாச்சாரியார்கள் வழக்குகளில் வழங்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மீறி அரசு செயல்பட்டு வருகிறது.
இதனை கண்டித்து ஆகம கோயில்களில் கட்டாயமாக உச்சநீதிமன்ற தீர்ப்பின் படியே அர்ச்சகர்கள் நியமனம் செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரப்பட்டது.
இந்த வழக்கை உச்சநீதிமன்றம் நீதிபதிகள் போபண்ணா மற்றும் எம்.எம்.சந்ரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.