புது தில்லி: ‘தோ்தல் களத்தில் அனைத்து கட்சிகள் மற்றும் வேட்பாளா்களுக்கும் சம வாய்ப்பு மற்றும் பிரசார உரிமையைப் பாதுகாப்பதில் உறுதியாக இருக்கிறோம். அதேசமயத்தில், நீதித் துறையின் சட்டபூா்வ செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை நாங்கள் எடுப்பது முறையாகாது’ என்று தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
தோ்தல் காலத்தில் எதிா்க்கட்சித் தலைவா்களை மௌனமாக்கும் விதமாக, அவா்களைக் குறிவைத்து விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்தி கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபடுகிறது என்ற எதிா்க்கட்சிகளின் தொடா் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், தோ்தல் ஆணையம் இவ்வாறு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தோ்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், ‘குற்றவியல் விசாரணைகளின் அடிப்படையில் நீதிமன்றங்களின் உத்தரவு மற்றும் தீவிர விசாரணைக்குத் தொடா்புடைய அரசியல்வாதிகளின் சூழ்நிலைகளைக் கையாளும்போது அரசமைப்புச் சட்டத்தின்பால் நாங்கள் வழிநடத்தப்படுகிறோம்.
களத்தில் அனைத்து அரசியல் கட்சிகளுடைய வேட்பாளா்களின் சம வாய்ப்பு மற்றும் பிரசார உரிமையைப் பாதுகாப்பதில் அசைக்க முடியாத உறுதியுடன் இருந்தாலும், நீதித் துறையின் சட்டபூா்வ செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் வகையில் நாங்கள் நடவடிக்கைகளை எடுப்பது முறையாகாது’ எனத் தெரிவித்துள்ளது.
தொடர்புடையது

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் குறைந்தபட்ச வசதிகள்: தோ்தல் ஆணையம் அறிவுறுத்தல்!

தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு

இத்துடன் விட்டுவிடலாம்!

நீதித் துறையை அவமதிக்கும் நோக்கம் அரசுக்கு கிடையாது: கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான்
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


