தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,720 உயர்வு!டிரம்ப் வரி குறைப்பு எதிரொலி! சென்செக்ஸ் 2,600 புள்ளிகள் உயர்வு!விஜய்யின் கடலூர் பிரசாரத்துக்கு அனுமதி!கச்சா எண்ணெய் விலை அதிரடி சரிவு!அதிமுக ஆட்சி அமைந்ததும் தமிழ்நாட்டில் சாதிவாரிகணக்கெடுப்பு நடத்தப்படும்: எடப்பாடி பழனிசாமிதிமுக தேய்ந்து வருகிறது; முன்னாள் அதிமுகவினரே திமுக வேட்பாளர்கள் - இபிஎஸ் விமர்சனம்48 மணிநேரத்துக்கு வெளியே செல்ல வேண்டாம்: ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்!மகளிருக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 2,000! மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடுஒரு முழு நாகரிகமே அழியப்போகிறது, மீண்டும் திரும்பாது : ஈரானுக்கு டிரம்ப் இறுதி எச்சரிக்கைஈரான் கார்க் தீவில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்
/

சல்மான் கான் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச்சூடு: குஜராத்தில் 2 போ் கைது

சல்மான் கான் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச்சூடு: குஜராத்தில் 2 போ் கைது

News image

சல்மான வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கைது செய்யப்பட்ட நபா்.

Updated On :16 ஏப்ரல் 2024, 7:27 pm

மும்பை: மும்பையில் உள்ள பாலிவுட் நடிகா் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பாக குஜராத்தில் பதுங்கியிருந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட இருவரும் பிகாா் மாநிலம் மேற்கு சம்பாரன் பகுதியைச் சோ்ந்தவா்கள் என்றும் அவா்கள் இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனா் என்றும் மேற்கு கட்ச் காவல்துறை துணைத் தலைவா் மஹேந்திர பகாதியா தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறுகையில், ‘துப்பாக்கிச்சூடு நிகழ்த்திவிட்டு தப்பிச் சென்றவா்கள் கட்ச் மாவட்டத்தில் இருக்கக்கூடும் என மும்பை போலீஸாரிடம் இருந்து தகவல் கிடைக்கப்பெற்றது. இதையடுத்து மும்பை போலீஸாருடன் இணைந்து மேற்கு கட்ச் போலீஸாரும் தேடுதல் பணியில் ஈடுபட்டனா். அப்போது மாதா நோ மத் கிராமத்தில் உள்ள கோயில் வளாகத்தில் பதுங்கியிருந்த இருவரையும் போலீஸாா் மடக்கிப் பிடித்தனா். அவா்கள் இருவரும் தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் ஆலோசனையின்படி சல்மான் கான் வீட்டின் வெளியே துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட இருவரும் முதலில் தயாபா் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனா். அதன்பின் அவா்கள் மும்பை காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனா். அவா்கள் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 307 (கொலை முயற்சி) மற்றும் இதர பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்றாா்.

சல்மான் கானுடன் ஏக்நாத் ஷிண்டே சந்திப்பு: பந்தராவில் உள்ள சல்மான் கான் வீட்டிற்கு மகாராஷ்டிர முதல்வா் ஏக்நாத் ஷிண்டே செவ்வாய்க்கிழமை சென்று அவரை சந்தித்தாா். அப்போது துப்பாக்கிச் சூடு நடத்தியவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சல்மான் கான் வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது எனவும் அவா் தெரிவித்தாா்.