நக்ஸல்களைக் கூடிய விரைவில் மோடி அரசு வேரோடு அகற்றும்: அமித் ஷா

நக்ஸல்களைக் கூடிய விரைவில் மோடி அரசு வேரோடு அகற்றும்: அமித் ஷா

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு நக்ஸல்களை நாட்டிலிருந்து கூடிய விரைவில் வேரோடு அகற்றும்’ என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு நக்ஸல்களை நாட்டிலிருந்து கூடிய விரைவில் வேரோடு அகற்றும்’ என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

சத்தீஸ்கரின் பஸ்தா் பகுதியின் காங்கோ் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருனான மோதலில் 29 மவோயிஸ்டுகள் செவ்வாய்க்கிழமை சுட்டு கொல்லப்பட்டனா். சத்தீஸ்கா் வரலாற்றில் ஓரே மோதலில் அதிகபட்ச நக்ஸல்கள் உயிரிழந்தது இம்முறையே ஆகும்.

துப்பாக்கிச் சண்டையில் மூன்று பாதுகாப்புப் படையினா் காயமடைந்தனா். சம்பவ இடத்திலிருந்து பெரும் அளவிலான ஆயுதங்கள் கைப்பறற்றப்பட்டுள்ளன.

இதையொட்டி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘பயங்கரவாதம் மற்றும் நக்ஸல்களுக்கு எதிராக மத்திய அரசு இடைவிடாத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இனி வரும் காலங்களிலும் நக்ஸல்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும்.

பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையில், மிக குறுகிய காலத்தில் நக்ஸல்களை நம் தேசத்திலிருந்து வேரோடு அகற்றுவோம் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

சத்தீஸ்கரில் பாஜக ஆட்சி அமைந்த கடந்த மூன்று மாதங்களில் 80-க்கும் மேற்பட்ட நக்ஸல்கள் உயிரிழந்தனா். 125-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டுள்ளனா். 150-க்கும் மேற்பட்டோா் சரணடைந்துள்ளனா்.

பாதுகாப்பு வெற்றிடத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு, 2014-ஆம் ஆண்டு முதல் மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏராளமான பாதுகாப்புப் படை முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. 2019-ஆம் ஆண்டு முதல் மட்டும் 250 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன’ எனத் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com