மக்களவை தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு வெள்ளியன்று (ஏப். 19) நடைபெறும் தொகுதிகளில் போட்டியிடும் அனைத்து பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கும், ராம நவமி திருநாளான இன்று(ஏப். 17), பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.
அக்கடிதத்தில், ‘மக்களின் ஆசீர்வாதத்துடன், பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தில் அடியெடுத்து வைப்பார்கள் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, வேட்பாளர்கள் அனைவரையும் தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரையும் வாழ்த்தியுள்ளார்.