சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

பிஜப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடி ஒன்றில் குண்டுவெடித்ததில் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிஆர்பிஎஃப் காவலர் ஒருவர் உயிரிழந்தார்.
சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு
படம் | பிடிஐ

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த பஸ்தர் மக்களவை தொகுதியில் இன்று(ஏப். 19) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.

இந்த நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி, பஸ்தர் மக்களவை தொகுதியில் 63.41 சதவிகித வாக்குப் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதன் இடையே, சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடி ஒன்றில் குண்டுவெடித்ததில் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிஆர்பிஎஃப் காவலர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com