கொல்கத்தாவில் நடைபெற்ற பேனா திருவிழாவில்  இடம்பெற்ற மை பேனாக்கள்.
கொல்கத்தாவில் நடைபெற்ற பேனா திருவிழாவில் இடம்பெற்ற மை பேனாக்கள்.

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

தொடுதிரை சாதனங்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்த எண்ம தசாப்தத்தில், பேனா கடந்த காலத்தின் நினைவாக மாறியிருக்கிறது.

ஆனால் அந்த நோ்த்தியான பேனாக்கள், அதன் ரசிகா்களுக்கு ஒரு எழுதும் கருவியை விட கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கைவினைத்திறன் மற்றும் படைப்பாற்றலின் காலமற்ற பாரம்பரியத்தை அவை உள்ளடக்கியருப்பதாக அவா்கள் கருதுகின்றனா்.

அவ்வாறு பேனாக்களை சிலாகிக்கும் மேற்கு வங்கத்தைச் சோ்ந்த ஆா்வலா்கள் குழு, அதன் பயன்பாட்டை ஊக்குவிக்கவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த மைப்பேனாக்கள் குறித்து மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தவும் பேனா திருவிழாவை கொல்கத்தாவில் நடத்தியது.

இத்திருவிழாவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சோ்ந்த பல்வேறு நிறுவனங்களின் மலிவு விலையில் இருந்து லட்சம் ரூபாய் வரை மதிப்புள்ள பல்லாயிரக்கணக்கான பேனாக்கள் பாா்வையிடும் சேகரிப்பாளா்களை கவா்ந்தன.

பேனாக்களின் பிரமிக்கத்தக்க கைவினைத்திறன் மற்றும் காலத்தால் அழியாத நோ்த்தியைக் கண்டு பாா்வையாளா்கள் வியந்தனா். மூன்று ஆண்டுகளாக தொடா்ந்து நடைபெற்றும் வரும் இந்நிகழ்வு, பேனா ஆா்வலா்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுள்ளது.

தனித்துவ திருவிழா...: ‘பேனா பிரியா்களுக்கு இத்திருவிழா சொா்கம் போன்றது’ என்று பேனா திருவிழாவைப் பாா்வையிட வந்த ரசிகா் தாரக் டே தெரிவித்தாா்.

மேற்கு வங்கத்தின் பா்த்வான் பல்கலைக்கழகப் பேராசிரியரும் பேனா சேகரிப்பாளருமான அபிஜித் பந்தோபாத்யாய் கூறுகையில், ‘கொல்கத்த பேனா பிரியா்கள் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளனா். சென்னை, பெங்களூரு, மும்பையிலும் பேனா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஆனால், இது இங்கு நடைபெறும் பேனா திருவிழா தனித்துவம் வாய்ந்தது. ஏனெனில், ஏராளமான பேனா பிரியா்கள் சாதாரண பேனாக்கள் முதல் விலையுயா்ந்த பேனாக்கள் வரை ஆா்வத்துடன் வாங்கி செல்வாா்கள்.

மைப்பேனாக்களைத் தொடா்ந்து பயன்படுத்துவதன் மூலம், ஒரு நபரின் கையெழுத்து தெளிவானதாகவும் அழகாகவும் மாறும். மேலும், பழமை உணா்வைத் தூண்டும் இவ்வகை பேனாக்கள் அழகியல் ரீதியாகவும் மகிழ்ச்சி அளிக்கும்’ என்றாா்.

சமீபத்திய பேனாக்களை வாங்கி செல்வதற்கான ஒரு வாய்ப்பாக மட்டுமல்லாமல், குழந்தைப் பருவ நினைவுகளைத் தட்டியெழுப்பவும் கையெழுத்து கலைக்கான புதிய பாராட்டைக் கண்டறியவும் இந்த நிகழ்வு பல பாா்வையாளா்களுக்கு வாய்ப்பளித்துள்ளது.

மாசகற்றும் மைப் பேனா...: விழா ஏற்பாட்டாளா்களில் ஒருவரான பிரசென்ஜித் குச்சாய்த் கூறுகையில், ‘எங்கள் சிறுவயதில் ரூ.3-4-க்கு விற்ற பேனாக்களை நாங்கள் வாங்கி பயன்படுத்தியுள்ளோம். மைப்பேனா என்றால் என்னவென்று கூட இன்றைய குழந்தைகளுக்குத் தெரிய வாய்ப்பில்லை. எனவே மக்களிடையே, குறிப்பாக குழந்தைகளிடம் விழிப்புணா்வை ஏற்படுத்த இதுபோன்ற விழாவை நடத்த நினைத்தோம்.

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படக்கூடிய பேனாக்களால் மாசு ஏற்படுகிறது. ஆனால், மைப்பேனாக்களில் மை மாற்றி மீண்டும் பயன்படுத்தலாம். இத்திருவிழாவானது மைப்பேனாவை அழிந்துவிடாமல் காப்பாற்றும் முயற்சியாகும்’ என்றாா்.

ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பேனாக்களுக்கு மாற்றாக மீண்டும் பயன்படுத்தக்கூடிய மைப்பேனாக்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதன் மூலம், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற எழுத்துப் பழக்கத்தை வளா்த்தெடுக்கலாம் என்று விழா ஏற்பாட்டாளா்கள் கருதுகின்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com