பிரதமர் மோடி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், ”முதற்கட்ட வாக்குப்பதிவு நாளில் வாக்காளர்களிடமிருந்து சிறந்த பங்களிப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி!
இந்தியா முழுவதும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களித்து வருகின்றனர் என்பது வெளிப்பட்டுள்ளது” எனப் பதிவிட்டுள்ளார்.