”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

உச்ச நீதிமன்றத்தால் அரசியலமைப்பிற்கு முரணானதாகக் கருதப்பட்ட தேர்தல் பத்திரத் திட்டம், பாஜக 3-வது முறையாக ஆட்சியமைத்தால் மீண்டும் கொண்டு வரப்படும் என்றார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

இந்த நிலையில், நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ள கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், ”உச்சநீதிமன்றத்தால் அரசமைப்புக்கு எதிரானதாகவும் சட்டத்திற்கு புறம்பானதாகவும் குறிப்பிடப்பட்டுள்ள தேர்தல் பத்திரங்கள் திட்டம் பாஜக மீண்டும் ஆட்சியமைத்தால் மீண்டும் கொண்டுவரப்படுமென்பதை உறுதிசெய்துள்ளார் மத்திய நிதையமைச்சர் நிர்மலா சீதாராமன்.

பாஜக 'பேபிஎம் மோசடி' திட்டம் மூலம் ரூ. 4 லட்சம் கோடி மக்கள பணத்தை கொள்ளையடித்தது நமக்கு தெரியும். இப்போது கொள்ளையடிப்பதை தொடரவிருக்கிறார்கள்” என தனது எக்ஸ் தளப் பக்கதில் பதிவிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com