காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

”எப்படி அமேதியை விட்டு ராகுல் ஓடினாரோ, அதுபோல, வயநாட்டை விட்டும் ராகுல் வெளியேறுவார்.”
காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

மகாராஷ்டிரத்தின் நாந்தேட்டில் பிரதமர் மோடி இன்று(ஏப். 20) தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தார்.

கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் அமேதி தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி அங்கு தோல்வியடைந்த பின், அங்கு மீண்டும் போட்டியிடவில்லை. இந்த நிலையில், இம்முறை கேரளத்தின் வயநாடு தொகுதியில் மீண்டும் களமிறங்கும் ராகுல் காந்திக்கு அமேதியில் ஏற்பட்ட கதி ஏற்படுமென்று பிரதமர் மோடி தனது பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது, “காங்கிரஸின் இளவரசர் (ராகுல் காந்தி) வயநாட்டில் நெருக்கடியை எதிர்கொள்கிறார்.

கேரளத்தின் வயநாட்டில் ராகுல் காந்தி வாக்காளர்களின் ஆதரவை பெற போராடி வருகிறார். ஏப்ரல். 26-ஆம் தேதி, வாக்குப்பதிவுக்கு பின், எப்படி அமேதியை விட்டு ராகுல் ஓடினாரோ, அதுபோல, வயநாட்டை விட்டும் ராகுல் வெளியேறுவார். வாக்குப்பதிவுக்கு முன்பே, காங்கிரஸ் தலைவர்கள் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளனர்” என்றார்.

கேரளத்தில் ஏப்ரல். 26-ஆம் தேதி ஒரே கட்டமாக மொத்தமுள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com