பஞ்சாப் காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலர் தஜிந்தர் பால் சிங் பிட்டு உள்பட இரண்டு காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்.
தஜிந்தர் பாஜகவில் இணைவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு காங்கிரஸிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அவரும் மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சந்தோக் சிங் சௌத்ரியின் மனைவி கரம்ஜித் கௌர் சௌத்ரியும், மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் அதன் தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.
சௌத்ரி கடந்தாண்டு ஜலந்தரில் மக்களவை இடைத்தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். பஞ்சாபில் ஜூன் 1ல் மக்களவைத் தேர்தல் நடத்தப்படுகிறது.