சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஏப்ரல் 30-ம் தேதிக்கு ஒத்திவைப்பு.
Sisodia
Sisodia

மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை ஏப்ரல் 30-ம் தேதிக்கு ஒத்திவைத்து தில்லி அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தில்லி கலால் கொள்கை ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா கடந்தாண்டு கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் பிரசாரம் மேற்கொள்ள இடைக்கால ஜாமீன் கோரி மணீஷ் சிசோடியா மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்தநிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா முன்னிலையில் நடைபெற்றது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மனு மீதான தீர்ப்பை வரும் 30-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

வழக்கமான ஜாமீன் மனு ஒத்திவைக்கப்படுவதால், மனு பயனற்றதாகிவிட்டது என்று சிசோடியாவின் வழக்குரைஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com