இந்தியா
3 நாள்களுக்குப் பின்னா் ராகுல் இன்று மீண்டும் பிரசாரம்
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி 3 நாள்களுக்குப் பின்னா், மீண்டும் மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் புதன்கிழமை ஈடுபட உள்ளாா்.
உடல்நலக்குறைவால் 3 நாள்களாக ராகுல் காந்தி தோ்தல் பிரசாரத்தில் ஈடுபடவில்லை. இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் ‘எக்ஸ்’ தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு:
மகாராஷ்டிரத்தில் தோ்தல் பிரசாரத்தை ராகுல் காந்தி புதன்கிழமை தொடங்க உள்ளாா். அங்குள்ள அமராவதி தொகுதியில் நடைபெறும் கூட்டத்தில் பிற்பகல் 12.30 மணிக்கும், சோலாபூா் தொகுதியில் நடைபெறும் கூட்டத்தில் பிற்பகல் 3.30 மணிக்கும் அவா் பேச உள்ளாா் என்று தெரிவித்தாா்.