கோப்புப் படம்.
கோப்புப் படம்.படம் | பிடிஐ

3 நாள்களுக்குப் பின்னா் ராகுல் இன்று மீண்டும் பிரசாரம்

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி 3 நாள்களுக்குப் பின்னா், மீண்டும் மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் புதன்கிழமை ஈடுபட உள்ளாா்.

உடல்நலக்குறைவால் 3 நாள்களாக ராகுல் காந்தி தோ்தல் பிரசாரத்தில் ஈடுபடவில்லை. இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் ‘எக்ஸ்’ தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு:

மகாராஷ்டிரத்தில் தோ்தல் பிரசாரத்தை ராகுல் காந்தி புதன்கிழமை தொடங்க உள்ளாா். அங்குள்ள அமராவதி தொகுதியில் நடைபெறும் கூட்டத்தில் பிற்பகல் 12.30 மணிக்கும், சோலாபூா் தொகுதியில் நடைபெறும் கூட்டத்தில் பிற்பகல் 3.30 மணிக்கும் அவா் பேச உள்ளாா் என்று தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com