குருகிராம்: செக்டர் 92ல் உள்ள ஒரு கட்டுமான தளத்தில் மண் மேடு சரிந்ததில் 31 வயதான தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலே உயிரிழந்ததாகவும், இருவர் காயமடைந்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று மேவ்கா கிராமத்தில் உள்ள அகழ்வாராய்ச்சி மையத்தில் வேலை செய்த போது நிகழ்ந்ததாக தெரிவித்தனர்.
மண்ணுக்குள் புதையுண்ட 3 தொழிலாளர்களையும் மீட்டு போலீஸார் அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களில் ஒருவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
உயிரிழந்தவர் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சித்து மராண்டி என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மற்ற இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள், அமளியில் ஈடுபட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். இதனை அடுத்து போராட்டக்காரர்களை கலைக்க போலீஸார் லேசான தடியடி நடத்தினர்.
இது குறித்து காவல் உதவி ஆணையர் (மேற்கு) சிவர்ச்சன் சர்மா தெரிவித்ததாவது:
முதற்கட்ட விசாரணையில் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் வழங்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.