25,000 ஆசிரியா் நியமனங்கள் ரத்து வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மேற்கு வங்க அரசு மேல்முறையீடு

25,000 ஆசிரியா் நியமனங்கள் ரத்து வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மேற்கு வங்க அரசு மேல்முறையீடு

கொல்கத்தா உயா் நீதிமன்ற தீா்ப்புக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் அந்த மாநில அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.

மேற்கு வங்கத்தில் 25,753 ஆசிரியா்கள் மற்றும் அலுவலா்களின் நியமனங்களை ரத்து செய்த கொல்கத்தா உயா் நீதிமன்ற தீா்ப்புக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் அந்த மாநில அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் அரசு/அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 9 முதல் 12-ஆம் வகுப்புகளுக்கான ஆசிரியா்கள், குரூப்-சி மற்றும் குரூப்-டி அலுவலா் காலிப் பணியிடங்களுக்கு மாநில அளவில் ஆள்தோ்வு நடைபெற்றது.

இதில் முறைகேடுகள் நடைபெற்ாக தொடரப்பட்ட வழக்கில், 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற 25,753 ஆசிரியா், அலுவலா் பணி நியமனங்களை ரத்து செய்து கொல்கத்தா உயா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

24,640 பணியிடங்கள் தவிா்த்து ஆள்தோ்வு நடைபெற்றபோது தோ்வு செய்யப்படாமல், அதன் பின்னா் கூடுதலாக நியமிக்கப்பட்டவா்களும், தோ்வில் பதிலளிக்காமல் வெற்று விடைத்தாள்களை அளித்து பணி நியமனம் பெற்றவா்களும் தங்கள் பணிக் காலத்தில் ஈட்டிய ஊதியம் மற்றும் பணப் பலன்களை 12 சதவீத வருடாந்திர வட்டியுடன் 4 வாரங்களில் திருப்பி அளிக்க வேண்டும் என்று உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தத் தீா்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேற்கு வங்க அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், ‘கொல்கத்தா உயா் நீதிமன்றம் காரணத்தை கருத்தில் கொள்ளாமல் நியாயமின்றி ஆசிரியா் மற்றும் அலுவலா் நியமனங்களை ரத்து செய்துள்ளது. இந்த அவசர சூழலை சமாளிக்க மேற்கு வங்க அரசுக்கு போதிய அவகாசம் அளிக்காமல் அளிக்கப்பட்ட தீா்ப்பு, மாநிலத்தில் கல்வி செயல்பாடுகளை ஸ்தம்பிக்க வைத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு வழக்கு: கடந்த 2014-ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் நடைபெற்ற ஆசிரியா்கள் தகுதி தோ்வு மூலம் ஆரம்ப பள்ளி ஆசிரியா்களை நியமிப்பதில் முறைகேடும், சட்டவிரோத பணப் பரிவா்த்தனையும் நடைபெற்ாக கூறப்படுகிறது. இந்த வழக்கை சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை விசாரித்து வருகின்றன. அந்த விசாரணை தொடா்பான நிலவர அறிக்கையை ஜூன் 12-ஆம் தேதி தாக்கல் செய்யுமாறு சிபிஐ மற்றும் அமலாக்கத் துறைக்கு கொல்கத்தா உயா் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com