மத்திய பிரதேசத்தின் சாகரில் இன்று(ஏப். 24) நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோயில் குடமுழுக்கு விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அவர் பேசியதாவது, “உங்களிடம் 2 வீடுகள் இருந்தால் அவற்றில் ஒன்றை எடுத்து தங்களின் வாக்குவங்கியாக இருக்கும் ஒரு பகுதியினருக்கு காங்கிரஸ் வழங்கிவிடும். உங்களிடம் 2 வண்டிகள் இருந்தால் அவற்றில் ஒன்றை எடுத்து தங்களின் வாக்குவங்கியாக இருக்கும் ஒரு பகுதியினருக்கு காங்கிரஸ் வழங்கிவிடும். நாட்டை பலவீனப்படுத்த காங்கிரஸ் உழைத்து வருகிறது. சமூக நீதியைக் கொன்றது காங்கிரஸ். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மிகப்பெரிய எதிரியாக இருப்பது காங்கிரஸ்” என்று பேசினார்.