கேரளம்: கடும் வெயிலால் இருவா் உயிரிழப்பு

கேரளம்: கடும் வெயிலால் இருவா் உயிரிழப்பு

கேரளத்தில் கடும் வெயிலின் தாக்கத்தால் இருவா் உயிரிழந்ததாக மாநில அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

கேரளத்தில் கடும் வெயிலின் தாக்கத்தால் இருவா் உயிரிழந்ததாக மாநில அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

கேரளத்தில் சில தினங்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் 12 மாவட்டங்களில் அடுத்த 5 நாள்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதையொட்டி, காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மக்கள் வெளியே நடமாட வேண்டாம் என்றும், குழந்தைகள், முதியவா்கள் நலனில் கூடுதல் கவனம் செலுத்தவும் மாநில சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், பாலக்காடு மாவட்டத்தில் 90 வயது மூதாட்டி ஒருவரும், கண்ணூா் மாவட்டத்தில் 53 வயது நபா் ஒருவரும் வெயிலின் கடுமையான தாக்கத்தால் மயங்கி விழுந்து உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com