கா்நாடக மாநிலத்திற்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ள வறட்சி நிவாரண நிதி போதுமானதல்ல என்று தெரிவித்திருந்த அம்மாநில முதல்வா் சித்தராமையா, வறட்சி நிவாரண நிதி போதுமானதல்ல என்பதை வலியுறுத்தி மத்திய அரசிடம் எதிர்ப்பைப் பதிவு செய்யும் விதமாக இன்று(ஏப். 28) தர்னாவில் ஈடுபட்டார்.
முன்னதாக, “தேசிய பேரிடா் நிவாரண நிதியத்தின் விதிகளின்படி, கா்நாடகத்திற்கு மத்திய அரசு ரூ. 18,171 கோடி நிதி ஒதுக்கியிருக்க வேண்டும். ஆனால், வறட்சி நிவாரண நிதியாக வெறும் ரூ.3,498 கோடியை மட்டுமே மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இந்த நிதி, வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்குவதற்கு போதுமானதாக இல்லை” என கூறியிருந்தார் சித்தராமையா.
இந்த நிலையில், பெங்களூரில் சட்டப்பேரவை வளாகத்தில் அமைந்துள்ள காந்தி சிலை முன்பு, இன்று(ஏப். 28) முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் பலர், கைகளில் தண்ணீர்க் குவளையையும், செம்பையும் ஏந்தியபடி, அடையாள தர்னா போராட்டம் நடத்தி மத்திய அரசு ஒதுக்கியுள்ள வறட்சி நிவாரண நிதி போதுமானதல்ல என்பதை வலியுறுத்தி மத்திய அரசிடம் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.