பிகாரின் பெகுசாராயில் இன்று(ஏப். 29) தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்டு ஹெலிகாப்டரில் ஏறி புறப்பட்டார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
ஆனால், அந்த அமித் ஷா பயணித்த ஹெலிகாப்டர் தரையிலிருந்து சிறிதுதூரம் மேலே எழும்பும்போது, விமானியின் கட்டுப்பாட்டை மீறி நிலை குலைந்து தடுமாறியதாகக் கூறப்படுகிறது. இந்த காணொலி சமூக ஊடகங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
இதைக் கவனித்த விமானி சாதுரியமாகச் செயல்பட்டு ஹெலிகாப்டரை பத்திரமாக இயக்கியுள்ளார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இது குறித்து அரசு தரப்பு அதிகாரிகளிடம் பேசுகையில், அமித் ஷா சென்ற ஹெலிகாப்டர் வழக்கம் போல இயக்கப்பட்டதாகவும், அதில் எவ்வித பிர்சனையும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.