இந்திய கடற்படைத் தளபதியாகப் பொறுப்பு வகித்த ஆர். ஹரி குமார் ஓய்வு பெற்றார்.
இந்த நிலையில், கடற்படை செயல்பாட்டு தலைமை இயக்குநராகப் பொறுப்பு வகித்த தினேஷ் குமார் திரிபாதி, கடற்படைத் தளபதியாக கடந்த 19-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாட்டின் 26-வது கடற்படைத் தளபதியாக இன்று (ஏப். 30) பொறுப்பேற்றுக் கொண்டார் தினேஷ் குமார் திரிபாதி.
ஐஎன்எஸ் கிர்ச், ஐஎன்எஸ் கவச் ஆகிய போர்க் கப்பல்களை தலைமையேற்று திறம்பட வழிநடத்தியவர் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி. இதனிடையே, கடற்படைத் தளபதியாக பொறுப்பேற்கும் முன், அவர் தனது தாயாரின் காலில் விழுந்து வணங்கி ஆசிபெற்றது காண்போரை நெகிழச் செய்தது.