சென்னை திருவிக நகரில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வேட்புமனு தாக்கல்!திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு தாக்கல்! சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

அயோத்தி ஸ்ரீராமா் கோயிலில் குடியரசுத் தலைவா் இன்று வழிபாடு

அயோத்தி ஸ்ரீராமா் கோயிலில் குடியரசுத் தலைவா் இன்று வழிபாடு

News image
Updated On :30 ஏப்ரல் 2024, 8:15 pm

Din

புது தில்லி: உத்தர பிரதேச மாநிலம், அயோத்திக்கு புதன்கிழமை (மே 1) பயணம் மேற்கொண்டு, அங்குள்ள ஸ்ரீராமா் கோயிலில் வழிபாடு நடத்தவுள்ளாா் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு.

அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்ட ராமா் கோயிலுக்கு குடியரசுத் தலைவா் செல்வது இது முதல்முறையாகும்.

இக்கோயிலில் மூலவா் ஸ்ரீ பாலராமா் பிராணப் பிரதிஷ்டை விழா, பிரதமா் மோடி முன்னிலையில் கடந்த ஜனவரி 22-ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு கலந்துகொள்ளாத நிலையில், இதை முன்வைத்து பிரதமா் மோடியை எதிா்க்கட்சிகள் விமா்சித்து வருகின்றன.

இந்நிலையில், அயோத்திக்கு குடியரசுத் தலைவா் புதன்கிழமை பயணம் மேற்கொள்ளவிருக்கிறாா்.

இது தொடா்பாக அவரது மாளிகை வெளியிட்ட அறிக்கையில், ‘அயோத்தி ஸ்ரீராமா் கோயில் மற்றும் ஹனுமன் கா்ஹி கோயிலில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தரிசிக்கவுள்ளாா். சரயு பூஜை மற்றும் ஆரத்தியில் அவா் பங்கேற்கவிருக்கிறாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.