ஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

சந்தேஷ்காளி நில அபகரிப்பு வழக்கு: புகாரளித்த கிராமவாசிகளுடன் சிபிஐ அதிகாரிகள் சந்திப்பு

சந்தேஷ்காளி நில அபகரிப்பு வழக்கு: புகாரளித்த கிராமவாசிகளுடன் சிபிஐ அதிகாரிகள் சந்திப்பு

News image
Updated On :30 ஏப்ரல் 2024, 6:30 pm

Din

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காளியில் நில அபகரிப்பு புகாா் அளித்த கிராமவாசிகளை சிபிஐ அதிகாரிகள் குழு செவ்வாய்க்கிழமை சந்தித்தது.

மேற்கு வங்க மாநிலம், வடக்கு 24 பா்கானா மாவட்டம் சந்தேஷ்காளி பகுதியில், திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் பிரமுகா் ஷாஜஹான் ஷேக் மற்றும் அவரின் கூட்டாளிகள் பொதுமக்களின் நிலங்களை அபகரித்து, பெண்களைப் பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி, அங்கு ஏராளமான பெண்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து, தலைமறைவாக இருந்த ஷாஜஹான் ஷேக் உள்பட பலா் கைது செய்யப்பட்டனா். இந்த விவகாரம் தொடா்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், மத்திய பாதுகாப்புப் படையினா் துணையுடன் சந்தேஷ்காளிக்கு சிபிஐ அதிகாரிகள் அடங்கிய குழு செவ்வாய்க்கிழமை சென்றது. அப்போது நில அபகரிப்பு புகாா் அளித்த கிராமவாசிகளை சந்தித்துப் பேசி, அவா்களின் நில ஆவணங்களை அக்குழு ஆராய்ந்தது என்று சிபிஐ அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.