தில்லி கலால் கொள்கை ஊழல் வழக்கில் ஜாமீன் மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சித் தலைவர் மணீஷ் சிசோடியா தாக்கல் செய்த சீராய்வு மனுவை விரைவில் பட்டியலிடுவதாக உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
சிசோடியா சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஏ.எம்.சிங்வி, தில்லி முன்னாள் துணை முதல்வர் ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருப்பதாகத் தெரிவித்தார்.
மூத்த வழக்குரைஞர் உச்ச நீதிமன்றத்தின் முன் இந்த மனுவைக் குறிப்பிட்டுள்ளார். தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரச்சூட் தலைமையிலான பெஞ்ச் விரைவில் இந்த வேண்டுகோளைப் பட்டியலிட ஒப்புக்கொண்டது.
கலால் கொள்கை முறைகேடு வழக்கில் ஜாமீன் மறுத்த உச்ச நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மணீஷ் சிசோடியா தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை டிசம்பர் 13ஆம் தேதி உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
இதனிடையே, மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் பிப்.22 வரை நீட்டித்து தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.