புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

குற்றச்சாட்டு வைத்தால் மட்டும் போதாது.. : அஸ்வினி வைஷ்ணவ்

எதிர்க்கட்சி எம்.பிக்களின் அலைபேசி கண்காணிக்கப்படுவதாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டில் நடவடிக்கை எடுக்காதது குறித்து அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

News image

அஸ்வினி வைஷ்ணவ்

Updated On :9 பிப்ரவரி 2024, 11:06 am

DIN

புது தில்லி: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், குற்றச்சாட்டு முன்வைத்த எதிர்க்கட்சி எம்.பியிடம் அவரது அலைபேசியை ஒப்படைக்குமாறும் விசாரணைக்கு ஒத்துழைக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆப்பிள் நிறுவனம், கடந்த ஆண்டு எதிர்க்கட்சி எம்.பிக்களின் அலைபேசி அரசால் கண்காணிக்கப்படுவதாக அனுப்பிய குறுஞ்செய்தி குறித்த விவகாரத்தில் மத்திய அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.

இது குறித்து பிரியங்கா சதுர்வேதி மக்களவையில் கேள்வி எழுப்பினார். அமைச்சருக்கு மின்னஞ்சல் அனுப்பி நான்கு மாதங்கள் ஆனபோதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என சதுர்வேதி குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக அஸ்வினி வைஷ்ணவ்,  “குற்றச்சாட்டு முன்வைப்பது மட்டும் போதாது. குற்றச்சாட்டு வைக்கப்பட்டால் சட்ட அமைப்புகளுக்கு நடவடிக்கை எடுக்க போதிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். உங்களது மொபைலை ஒப்படையுங்கள், தகவல்களைத் தெரிவியுங்கள், தொழில்நுட்ப ரீதியாக நாங்கள் பரிசோதிக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.