கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

அவமதிக்க முயன்ற இளைஞர்... பலியான அவலம்: நிஹாங் சீக்கியர் கைது

சீக்கியர்களின் புனித தலத்தை அவமதிக்க முயன்ற இளைஞர் பலியாகியுள்ளார்.

News image
Updated On :16 ஜனவரி 2024, 10:34 am

DIN

பக்வாரா: சீக்கியர்களின் வழிப்பாட்டுத்தலத்தை அவமதிக்க முயன்றதாக கூறப்படும் இளைஞரைக் கொலை செய்ததாக நிஹாங் சீக்கியர் ஒருவர் செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். 

நிஹாங் ராமன்தீப் சிங், ஒரு இளைஞரைக் கொலை செய்வதற்கு முன்பாக, எடுக்கப்பட்ட அந்த இளைஞரின் விடியோவை பதிவேற்றியுள்ளார்.

அதில் தான் புனிதத்தலத்தை அவமதிக்கும் நோக்கில் அனுப்பபட்டதாக அந்த இளைஞர் தெரிவித்துள்ளார். கொலை செய்தது குறித்தும் சிங் சிறிய காணொலி ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

இந்தக் கொலை நடைபெற்ற குருத்வாராவுக்கு பலியான இளைஞர் இரவு 10 மணிக்கு சென்றுள்ளார்.

அங்குள்ள கழிவறையில் மறைந்து இருந்துள்ளார். அவரின் இருப்பை உணர்ந்த குருத்வாராவின் காப்பாளர்கள் நள்ளிரவு 1 மணிக்கு சோதிக்க சென்றனர். அவர்கள் வலியுறுத்தியும் வெளியே வரமறுத்த இளைஞரை காப்பாளர்கள் வெளியே இழுத்து வந்துள்ளனர்.

குருத்வாராவை அவமதிக்கும் காரியத்தைச் செய்ய தன்னை அனுப்பியதாக இளைஞர் அங்குள்ளவர்களின் விசாரணைக்கு பதிலளித்துள்ளார். விடியோவில் அது பதிவாகியுள்ளது.

இரண்டு காப்பாளர்கள் காவல்நிலையத்துக்கு இது குறித்து தகவல் தெரிவிக்க சென்றுள்ளனர். இந்த வேளையில் நிஹாங் அந்த இளைஞரைக் கொன்றுள்ளார்.

நிஹாங்கை காவலர்கள் கைது செய்துள்ளனர். நிஹாங் மீது ஒன்றுக்கு மேற்பட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நிஹாங்கின் உதவியாளர்கள் தற்காப்புக்காக தான் அவர் அந்தக் காரியத்தை செய்ய வேண்டியிருந்ததாகவும் இறந்த இளைஞர்தான் முதலில் தாக்க முயன்றதாகவும் தெரிவித்துள்ளனர்.

சீக்கியர்களின் புனிதத்தலங்களை இழிவுப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து பஞ்சாப்பில் பதிவாகி வருகின்றன..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.