மக்களவைத் தேர்தலையொட்டி நமோ செயலி மூலம் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடுகிறார்.
தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளதால் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி, அதிமுக, தேமுதிக கூட்டணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
தமிழக பாஜக தொண்டர்களுடன் "எனது வாக்குச்சாவடி வலிமையானது" என்ற தலைப்பில் உரையாட ஆவலாகக் காத்திருக்கிறேன்.
தமிழ்நாட்டில் உள்ள நமது நிர்வாகிகள் மக்களுடன் பணியாற்றுவதும், நமது ஆட்சியின் திட்டங்கள் அனைத்தும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதும் பாராட்டுக்குரியதாகும்.
திமுகவின் தவறான ஆட்சியால் சோர்ந்து போன தமிழகம் பாஜக மீது நம்பிக்கை வைத்துள்ளது என்றும் அவர் கூறினார்.