ஜி.எஸ்.டி. வசூல் புதிய உச்சம்!

சரக்கு மற்றும் சேவை வரி வசூல் ரூ.2 லட்சத்தை கடந்தது இதுவே முதல்முறை.
ஜி.எஸ்.டி. வசூல் புதிய உச்சம்!

ஏப்ரல் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி) புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

கடந்த மாதத்தில் மட்டும் ரூ.2.10 லட்சம் கோடி சரக்கு மற்றும் சேவை வரியாக வசூலிக்கப்பட்டுள்ளது. இது கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தைவிட 12.4 சதவிகிதம் அதிகமாகும்.

மேலும், மாநிலங்களுக்கு வரி பகிர்ந்தளிக்கப்பட்ட பிறகு நிகர லாபமாக ரூ. 1.92 லட்சம் கோடி இருக்கும் எனவும், இது கடந்தாண்டைவிட 17.1 சதவிகிதம் வளர்ச்சி என்றும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

வசூலிக்கப்பட்ட வரி விவரங்கள்:
மத்திய சரக்கு மற்றும் சேவை வரி - ரூ. 43,846 கோடி
மாநில சரக்கு மற்றும் சேவை வரி- ரூ. 53,538 கோடி
ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி - ரூ. 99,623 கோடி
செஸ் வரி - ரூ. 13,260 கோடி

சரக்கு மற்றும் சேவை வரி வசூல் ரூ.2 லட்சம் கோடியை கடந்தது இதுவே முதல்முறையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com