ஏப்ரல் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி) புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
கடந்த மாதத்தில் மட்டும் ரூ.2.10 லட்சம் கோடி சரக்கு மற்றும் சேவை வரியாக வசூலிக்கப்பட்டுள்ளது. இது கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தைவிட 12.4 சதவிகிதம் அதிகமாகும்.
மேலும், மாநிலங்களுக்கு வரி பகிர்ந்தளிக்கப்பட்ட பிறகு நிகர லாபமாக ரூ. 1.92 லட்சம் கோடி இருக்கும் எனவும், இது கடந்தாண்டைவிட 17.1 சதவிகிதம் வளர்ச்சி என்றும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
சரக்கு மற்றும் சேவை வரி வசூல் ரூ.2 லட்சம் கோடியை கடந்தது இதுவே முதல்முறையாகும்.