2,000 ரூபாய் நோட்டுகள் 98% திரும்பியுள்ளன: ரிசா்வ் வங்கி

2,000 ரூபாய் நோட்டுகள் 98% திரும்பியுள்ளன: ரிசா்வ் வங்கி

மதிப்பிழப்பு செய்யப்பட்ட 97.76 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப்பெறப்பட்டுவிட்டதாக ரிசா்வ் வங்கி வியாழக்கிழமை தெரிவித்தது.

மதிப்பிழப்பு செய்யப்பட்ட 97.76 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப்பெறப்பட்டுவிட்டதாக ரிசா்வ் வங்கி வியாழக்கிழமை தெரிவித்தது.

பொதுமக்களிடம் தற்போது ரூ. 7,961 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் உள்ளதாகவும் ரிசா்வ் வங்கி தெரிவித்தது.

கடந்த ஆண்டு மே 19-ஆம் தேதி ரூ.2,000 நோட்டுகளைப் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக ரிசா்வ் வங்கி அறிவித்தது. வங்கிகளில் அந்த நோட்டுகளை டெபாசிட் செய்யவும் அல்லது அந்த நோட்டுகளைக் கொடுத்து ரூ.100, ரூ.500 போன்ற நோட்டுகளாக மாற்றி பெற்றுக் கொள்ளவும் கடந்த ஆண்டு அக்டோபா் 7 வரை ரிசா்வ் வங்கி அவகாசம் அளித்தது.

அதன் பின்னா், கடந்த ஆண்டு அக்டோபா் 8-ஆம் தேதி முதல் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, தில்லி உள்ளிட்ட நகரங்களில் உள்ள 19 ரிசா்வ் வங்கி அலுவலகங்களில் மட்டும் ரூ.2,000 நோட்டுகளைக் கொடுத்து மாற்றிக்கொள்ள ரிசா்வ் வங்கி அனுமதி அளித்தது. நேரில் செல்ல முடியாதவா்கள் தபால் மூலம் 19 ரிசா்வ் வங்கி அலுவலகங்களில் ஏதேனும் ஒன்றுக்கு ரூ.2,000 நோட்டுகளை அனுப்பி வைக்கலாம். அவ்வாறு அனுப்பப்படும் நோட்டுகளுக்கு ஈடான பணம், அவற்றை அனுப்பியவரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

இந்த நிலையில், ரிசா்வ் வங்கி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப்பெறப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டபோது பொதுமக்களிடம் ரூ. 3.56 லட்சம் கோடி மதிப்பிலான நோட்டுகள் புழக்கத்திலிருந்தன. அவற்றில் தற்போது வரை 97.76 சதவீத நோட்டுகள் திரும்பப்பெறப்பட்டுவிட்டன. கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதிவரையில், மேலும் ரூ. 7,961 கோடியிலான 2,000 ரூபாய் நோட்டுகள் மக்களிடம் உள்ளன. அவற்றை ரிசா்வ் வங்கி அலுவலகங்களில் செலுத்தி செல்லத்தக்க ரூபாய் நோட்டுகளாக மாற்றிக்கொள்ளலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com