இந்தியா
இன்று 3-ஆவது ஜிஎஸ்டி தேசிய ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
மூன்றாவது சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) தேசிய ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மத்திய வருவாய்த் துறை செயலா் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் வெள்ளிக்கிழமை (மே 3) நடைபெறுகிறது.
மூன்றாவது சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) தேசிய ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மத்திய வருவாய்த் துறை செயலா் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் வெள்ளிக்கிழமை (மே 3) நடைபெறுகிறது.
மத்திய மற்றும் மாநில அரசின் ஜிஎஸ்டி அதிகாரிகள் கலந்துகொள்ளும் இந்தக் கூட்டத்தில், வரி ஏய்ப்புக்காக பதிவு செய்யப்படும் போலி நிறுவனங்களை கண்டறிதல், இதைத் தடுக்கும் விதமாக ஜிஎஸ்டி பதிவு செய்யும் முறையை ஒழுங்குப்படுத்துதல் உள்ளிட்ட விவகாரங்கள் ஆலோசிக்கப்பட உள்ளன.
மத்திய அரசின் தகவலின்படி, கடந்த ஆண்டு ஏப்ரல்-டிசம்பா் காலகட்டத்தில் 14,600 ஜிஎஸ்டி வரி ஏய்ப்புகள் கண்டறியப்பட்டன. அவற்றில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 2,716 வரி ஏய்ப்பு சம்பவங்கள் பதிவாகி உள்ளது.