மேற்கு வங்க ஆளுநர், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான சி.வி. ஆனந்த போஸ் (71) மீது பாலியல் புகார் சுமத்தப்பட்டுள்ளது.
மேற்கு வங்க ஆளுநர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர், ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் மீது பாலியல் புகார் சுமத்தியுள்ள நிலையில், தன் மீது புனையப்பட்டுள்ள போலியான புகார்கள் குறித்து வருந்தப் போவதில்லை, ”வாய்மையே வெல்லும்” என அவர் தெரிவித்துள்ளார்.
”என்னை இழிவுபடுத்தி தேர்தல் ஆதாயம் தேட முயல்வோரை கடவுள் ஆசிர்வதிக்கட்டும். ஆனால், வங்காளத்தில் ஊழல் மற்றும் வன்முறைக்கு எதிரான எனது போராட்டத்தை அவர்களால் நிறுத்த முடியாது” என அவர் தெரிவித்துள்ளார்.